Monday 16 December 2013


சீனா அண்ணன் தேசம்-சுபஸ்ரீ மோகன்.


சைனீஸ் Aggression at LOC போலவே உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுடைய தேடுதலுக்கு உட்பட்டு, நான் வாங்கி என் கைகளுக்கு எப்படி வந்து சேர்ந்தது என்று எனக்கு தெரியாது.

என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்தேறிய, சீனாவின் Diplomatic  பாஷையில் June Fourth Incident என்று அழைக்கப்படும்-1989-ம் வருடம் Tinanmen Square-ல் நடந்த மாணவர் புரட்சியை அவர்கள் அடக்கிய விதம், நேரு காலத்தில் நம் இந்தியாவை ஏமாற்றிய விதம், குங் பூ படங்களில் அவர்கள்  அடித்துக் கொள்ளும் அடிப்படை காரணங்கள், அவர்களுடைய  அந்த Glee சிரிப்பு,எப்போதாவது நண்பர்களுடன் Chinese உணவகங்களில், சுத்த சைவனாகிய நான் அந்த வாசனைகளை பொறுத்துக் கொண்டதும்அவர்களுடைய மர்மமான தற்போதைய பொருளாதாரமும், உலக சந்தைகளில் உந்தி தள்ளப்படும் உணவு வகைகள், குழந்தைகள் பாவிக்கும் விளையாட்டுப் பொருள்களின் தரம் ஆகியவற்றில் உள்ள சந்தேகங்கள், அங்கு தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமெல்லாம் என்னுடைய மனதில் ஏற்படுத்தியிருந்த ஒரு விதமான அபிப்பிராயத்தை உங்களுடைய எழுத்து, நீங்கள் எடுத்துக்கொண்ட களம், கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாகியுள்ளது என்றால் அது மிகையில்லை.

எல்லா நாடுகளிலுமே அந்த நாட்டின் அரசியல், அந்த நாட்டு மக்களின் மேல் நமக்கு ஒரு தவறான பரிமாணங்களைத்தான் கொடுக்கிறது.

உங்களுடைய அணுகுதல் ஒரு பயணக் கட்டுரையாக இல்லாமல், வாழ்வியல் சார்ந்ததாக இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.

குறிப்பாக உங்களுடைய அப்பார்ட்மெண்ட் தேர்வு, தண்ணீர், மின்சாரம் அவைகளுக்கான Prepaid முறை, ஆயுள் நீண்டவர்களின் வாழ்வு முறை, வீட்டு வேலைக்காரர்களின் அர்ப்பணிப்பு உணர்வு,விடுமுறையை தேர்ந்தெடுக்கும் முறை, திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்ந்து தாய் தந்தையரின் உணர்வுகளுக்கும்  மதிப்பளித்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது, மற்ற  நாட்டினரிடமிருந்து சீனர்களின்  உடல்மொழி வேறுபடுதல்,பூங்காவில் இலவச உந்து வண்டியில் முதியவர்கள் கூட ஏறத் தயங்கும் சுய மரியாதை-சுய உழைப்பு, உங்கள் குழந்தைகளின் பள்ளியை கண்டுபிடிப்பதில் நீங்கள் அடைந்த சிரமம், நீங்கள் சீனர்களின் திருமணத்தில் பரிசளிப்பதில் கடந்த சங்கடம், Ben-ன் தோழமை இவை யாவையும் மிகத் துல்லியமாக அனுபவித்து உணர்ந்து எழுதிஇருக்கிறீர்கள்.

நான் சீனாவை சுற்றுலாவின் மூலமாக தெரிந்து கொள்வதைவிட உங்களுடைய பதிவின் மூலமாக அதிகமாக  அறிந்து கொண்டேன் என்பது நிதர்சனம். உங்களுடைய நேர்த்தியான  பகிர்தல் என்னுடைய பரதேசி வாழ்க்கையை மீண்டும் துவக்கத் தூண்டுகிறது. .நிறைய நண்பர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் தங்கள் வீடு, அலுவலகம் மற்றும் சுற்றுலா தலங்களை தவிர, மற்றவை பற்றி விவரிக்க இயலாததை கண்டிருக்கிறேன்.

சீனர்களுடைய பெளத்த மடாலயங்கள் பற்றி நீங்கள் நேராகப் பார்த்து விரிவாக எழுதினால்,--"ஏழாம் அறிவு" திரைப்படத்தில் முழுமையாக தெரிவிக்கத் தவறிய-போதி தர்மரின்-சீனாவுடனான தொடர்பு பற்றி நீங்கள் எழுதினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

சாதரணமாக ஒரு புத்தகத்தை படித்தவுடன்,நம் மீதான அதன் பாதிப்பை பணிச் சுமை என்ற ஒரு போர்வையில் எழுதாம லும், , இந்தியர்கள் என்றால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நிறைய பாராட்டுவார்கள் என்று நினைத்துக் கொ ண்டால் என்ன செய்வது என்றும் நிறைய முறை எழுத தவறியிருக்கிறேன்.

ஆனால் உங்களுடைய "சீனா அண்ணன் தேசம்" என்னுள் சீனாவைப் பற்றி மேலும் நிறைய படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஒரு விமரிசனமாக பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இனிமையானவர்கள் இனிமையான நோக்கையே உடையவர்கள் என்பதை உங்கள் எழுத்து உணர்த்தியிருக்கிறது.

Shiyu.

No comments:

Post a Comment