சென்னை Traffic
போதுமடா
சாமி ! என்று சென்னையை விட்டு
விலகி வருடங்கள் பல உருண்டோடினாலும், அதன்
பந்தத்தை விட்டு விடாமல், நன்றி மறவாமைக்காக சில
சமயங்களில் வர
வேண்டியிருக்கிறது.
இம்முறை
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்று
உறவினர்களின் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு வந்தும் இங்கு
வரவில்லை, அங்கு வரவில்லை என்று
ஒரே குற்றக்கணை பாய்வதினால்தான் இந்த
புலம்பல்.
சரியாக
எனது தெலுங்கானா நண்பன் Manu Ramidi-ம்,
அமாம் சுந்தர்! சென்னையில்
ஒரு நாளைக்கு ஒரு இடம்தான் செல்ல
முடியும் என்று சொல்கிறான்!
திரும்பவும்
பட்டிக்காட்டான் பட்டிணத்தை பார்த்தது போல, ஏம்பா! எதுக்குப்பா
இவ்வளவு Traffic என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
நான் சென்னையை விட்டு ஓடியதற்கு முதல்
காரணமே இதுதான். எங்கு பார்த்தாலும் விண்ணை
மறைத்து மேம்பாலங்கள் முடிந்தும், முடிவடையா நிலையிலும் போக்குவரத்தை மேலும் மோசமாக்குகின்றன.எத்தனை
பாலம் போட்டாலும், Flying Train விட்டாலும் பெருகிவரும் Population-தான்
அடிப்படைக் காரணம். போகிற போக்கைப்
பார்த்தால் தாம்பரத்தில் இருப்பவர்கள் திங்கள் கிழமை, பெரம்பூரில்
இருப்பவர்கள் செவ்வாய் கிழமை, கும்மிடிபூண்டியில் இருப்பவர்கள்
புதன் கிழமைதான் நகரத்தினுள் வரவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது.
நான் வேண்டுமானால் அடுத்தமுறை திருமலாவிற்கு வருவது போல் முன்பதிவு
செய்து விட்டு வருகிறேன்.
சென்னையில்
இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையான
Fortress-க்குள் தான் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment