Saturday 10 May 2014

6th May 2012
Mangalore.

மொபைல் அதிர்கிறது!
சிங்காரவேலன் அழைக்கிறான்!
என்னப்பா? சொல்லு.

சுந்தர் எங்கப்பா இருக்க?
நான் உனக்கு எதிர்கோடியில்!
FM கரியப்பா ரோட்டிலா?
இல்லை இல்லை, மங்களூரில்!

தம்புடு சொல்லுடா!என்ன விஷயம்!

I am Counting my days-பா!

என்னப்பா இப்படி சொல்ற, என்னாச்சு?

இல்லை, பெங்களூர்-ல் இருந்து கிளம்ப நேரம் வந்சிருச்சு!
சென்னையிலேயே வேற வேலை!

அப்படியா? அங்கே சும்மா ஆபீஸ்-ல் பென்ஷன் தானே வாங்கிட்டிருந்த!

சரி! நான் பெங்களூர்லிருந்து கிளம்புவதற்கு முன் நாம "நடந்தாய் வாழி காவேரி"(சிட்டி&தி.ஜா) புத்தகம் படி நதி ஒரமாகவே பயணம் செய்யனும்னு சொல்லிட்டிருந்தாயே!

சரி!கிளம்பிடுவோம்!

தம்புடு! நான் மங்களூரிலிருந்து 9-ம்தேதி காலை சிருங்கேரி வந்துவிடுகிறேன்! அங்கிருந்து மடிக்கேரி  போயிடலாம்!

"குடகு"லிருந்து சிவசமுத்திரம் வரலாம்னு சொல்றியா? என்னப்பா தலைகீழாக  டிராவல் பண்ணுவதா??!!

Thursday 8 May 2014


சிங்காரவேலன் எனது அத்தை மகன் (மாமன் மகன்) என்று சொல்வதிலே உரிமையும், இனிமையும் கலந்து பிரிக்க முடியாதவன் என்ற ஒரு உணர்வு இருக்கும். நாங்கள் இருவரும் 11,12,13 May 2012-ல், நடந்தாய் வாழி காவிரி(தி.ஜா-வின் வழிகாட்டுதலோடு), காவிரி தோன்றும் இடத்திலிருந்து, சிவசமுத்திரம் வரை ஒரு இண்டிகா காரில் ஓட்டுனர் நாகேஷ் உதவியுடன் பயணம் செய்தபோது, தம்புடு, பெங்களூரு ஆபிசில் உட்கார்ந்து வெட்டிக்கு புஸ்தகம்தானே படித்துக் கொண்டிருக்கிறாய், எனக்கு படிப்பதற்கு ஏதாவது suggest பண்ண முடியுமா என்று கேட்டதற்கு, நீ திரும்ப சென்னை போவதற்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அவன் எழுதிய Covering லெட்டெர்,

Singaravelan Baladandayutham
To Me
6 Jun 2012

hi dear

பொஸ்தக பரிந்துரை கேட்டில்ல. ம்ம் இதத்தான் விதின்னு சொல்வாங்க.
படி. மொந்த மொந்தையா   கள்ளு குடிச்ச மாதிரி இருக்கும்

அப்பனே படிச்சுபொலம்பி, விருவிதுர்த்து, அழுது, வருந்தி, மகிழ்ந்து, ரசிச்சு சிரிச்சு  கெட்டுப்போ.

படிக்க படிக்க -

இருவது / இருவத்தஞ்சு வருஷம் வீணடிச்சாச்சுனு   தோணும்.
அப்பன் ஆத்தாள வைய தோணும் (நல்ல பொஸ்தகத்தலாம் நமக்கு அறிமுகபடுத்தத் தெரியலேயே)    
குபுகுபுன்னு மோட்டுவளைய பாத்து பொக விடத் தோணும்
மழைல நனையத்  தோணும்
வெயில்ல நடக்கத்  தோணும்
இவ்ளோ பறவ பூவு இருக்கா -  பறவ புவ பேருலாம் தெரியலைனு தோணும்
தண்ணியடிக்கும் போது  அப்பளம் தான் சரியான சைடு டிஷ்ணு  தோணும்

இன்னும் நெறைய தோணும்!

அங்ஙனம்  தோண வாழ்த்துக்கள்

 அன்புடன்
தம்புடு

Wednesday 7 May 2014

9th April 2006
A Day of Fugitive

போலாம் சார்!
ஆனால் நீங்கள் Rayban போடக்கூடாது!
செயின், மோதிரம் போடக் கூடாது!
Rolex கட்டக் கூடாது!
லூயி பிலிப் pant, Shirt போடக்கூடாது!
பங்கஜ் அடுக்கிகொண்டே போக,
ராஜீவ்-ஐ பார்த்து, பங்கஜ் என்னை  கஷாயம் உடுத்த சொல்கிறான் என்று சொன்னதற்கு,
ராஜீவ் பதிலாக,
ஆமாம் சார், நீங்கள் நெற்றியில் வைத்திருக்கும் சந்தனம்,குங்குமமே உங்களை மதராஸி என்று காண்பித்து கொடுத்துவிடும் என்றான்.

இடையில் ஜஹானபாத் நம்முடைய திண்டுக்கல் போல் பூட்டுக்கு பிரசித்தி பெற்றது, ரொம்ப விசேஷமான ஊர். மொத்த வடக்கு,வட கிழக்கு மாநிலங்களுக்கு கிரிமினல்களை அனுப்பி வைக்கும் ஊர். இரண்டு மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து மெயின் ரோட்டுக்கு சுரங்கம் தோண்டி ஒரு 20 பேர் தப்பித்து விட்டார்கள். அந்த இடத்தை தாண்டுவதுதான் மிகவும் ஆபத்தானது!ஆள் கடத்தலும் ஜாஸ்தி!முதல்ல உங்களைத்தான் தூக்குவாங்க! எப்படி சார் வசதி! அமர்தீப் சின்ஹா வேறு ரொம்ப பயமுறுத்தினான்!

ஏம்பா!  எவ்வளவு பேர் போயிட்டு வர்றாங்க! map-ல பார்த்தேனே,NH 83 என்று வேற இருந்ததே?

இல்ல சார், எல்லோரும் மொத்தமா டூரிஸ்ட் மாதிரி போனா பிரச்சினை இல்லை, சென்னை மாதிரி நிறைய பஸ்களும் கிடையாது!ரோடும் ரொம்ப மோசம், ஒரே செம்மண் புழுதி! என வேறு அந்த பட்னா Regional Manager நாராயணன் பயமுறுத்தினார்.

என்ன நாணா ! அப்புறம் எப்படி நம்ம ஞானம் பெறுவது?

ஒண்ணு செய்வோம் சார்! டாக்ஸி எடுத்திட்டு போயிட்டு இரவே திரும்பிவிடுவோம்! தாமோதர் சிங்கை அங்கேயே விட்டுவிட்டு வந்தால் அவர் கயா வேலையை பார்த்துக் கொள்வார்!

பங்கஜ் போய் வேண்டுமென்றே ஒரு ஓட்டை டாக்ஸியா பார்த்து எடுத்துக்கொண்டு வர, நான், நாணா, பங்கஜ், ராஜீவ், அமர்தீப், தாமோதர் சிங் ஆகியோர் எங்கள் புனித பயணத்தை துவங்கினோம்.
கிளம்பும் போதே எப்போதும் போல் காலை மணி 11. கார் ட்ரைவர் பங்கஜ்க்கு மிகவும் தெரிந்தவர். எங்களுடைய ரோலர் கோஸ்டர் பயணம் ஆரம்பிக்க  மோசமான காருக்கும், மோசமான செம்மண் ரோட்டுக்கும் நடந்தது ஒரு துவந்த யுத்தம். எங்களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒரே புழுதி.காருக்குள்ளும் தான்!

அப்படி இப்படி என்று ஜகானாபாத் தாண்டும்போது ஒரு கஷ்டமும் இல்லாமல் கடந்து, மாலை சுமார் 4 மணிக்கு போதியை அடைந்து, புத்தம் சரணம், கச்சாமி சொல்லி,புல்லரித்து மெய்சிலிர்த்து, அங்கிருந்து நம் வீட்டிற்கெல்லாம் பேசி நீங்கள் நினைத்துப் பார்க்காத இடத்திற்கு நான் வந்து இருக்கிறேன் என்று சொல்ல,எல்லோரும் நீ புண்ய ஆத்மா தான் என்று வாழ்த்த, நேரம் கடந்து கொண்டிருந்தது.

அங்கிருந்து ஒரு 25 KM  தொலைவில் உள்ள விஷ்ணுபாத் சென்று, விஷ்ணுவின் பாதங்களுக்கு நாமே பூஜை செய்யலாம் என்பதால், அங்குள்ள பண்டிட்களின் உதவியுடன் பூஜை செய்துவிட்டு, திரும்ப வந்து,விட்டுப்போன"பால்கு"நதியை தரிசித்து முடிக்கும்போது 6 மணி.
நாணா, சார் பேசாமல் இங்கே இன்று தங்கிவிடலாம் என்று சொல்ல, பங்கஜும், கார் டிரைவரும் இல்லை! இல்லை! எவ்வாறாவது பட்னா திரும்பவேண்டுமென சொல்ல, திரும்பவதாக தீர்மானித்தோம்!

சரியாக பங்கஜ் ஆரம்பித்தான், சார்! நானும் டிரைவரும் காலையிலிருந்தே பீடா போடவில்லை! குறிப்பாக டிரைவருக்கு பீடா போட்டாதான் கார் ஓட்டவரும் என்று சொல்ல, பீடா கடையை தேடி போனால் அந்த ஊரில் உள்ள அனைவரும் அந்தக் கடையை முற்றுகை இட்டு இருந்தனர். ஒரு வழியாக எல்லோரும் பீடா போட்டு, பூமியை சிவப்பாக்கி கிளம்பும்போது,இரவு 7 மணி!

மறுபடியும் பங்கஜ் ஆரம்பித்தான்! நாம் ஜகானாபாத் நெருங்குவதால், எல்லோரும் சட்டையை கழற்றி கொள்ளலாம் என, எல்லோரும் சட்டையை கழற்றிக் கொண்டு, வேர்வையில் குளித்து, பனியனுடன் காரினுள் அமர்ந்து இருந்தோம்!பங்கஜ் பிறகு எல்லோருக்கும் இன்னொரு ரவுண்டு பீடா தர, எங்களுக்கு அவன் ஒரு Nativity கொண்டு வர முயற்சிக்கிறான் என்று தெரிந்தது.ஜகானாபாத் மக்களிடம் அவ்வளவு பயம்!

ஒருவாறு நாங்கள் மஹா நிர்வாணம் அடைந்து  பட்னா திரும்பியபோது இரவு 11மணி.

மனிதன் ஆசையை துறந்தால், ஏது இவ்வளவு அவஸ்தை!

உயிர் மேல் ஆசை இல்லாமல் எப்படி?

நாங்கள் போய்வந்த இடம் புத்த கயா.

பின்குறிப்பு
____________
தலையில் துணி கட்டியவாறு இருப்பவர்தான் பங்கஜ். முகத்திலேயே குறும்பு கொப்பளிக்கும்.ஒரு வாரத்திற்கு முன் பேசும்போது, சார்!இப்போது அவ்வளவு கடத்தல் பயம் இல்லை, மேலும் அப்போது லாலு வேறு இருந்தார்.ரோடுகள் கூட நன்றாக போட்டுவிட்டனர் என்றார். எப்படியோ நல்லா இருந்தாச் சரிதான்!

















கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தாயிற்று. தெற்கு,தென் மேற்கு திசை மட்டும் எப்போதும் ஏதாவது பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது. பெரியப்பா! நான் இன்னும் கன்னியாக்குமரியில் சூர்யோதயம் பார்க்கவேயில்லை என எனது சகோதரனின் 7-ம் வகுப்பு படிக்கும் மகன்  சூர்யா கேட்க,  இந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த், கண்ணன் தொல்லை தாங்கமுடியலைப்பா!என்ற அலம்பலுடன் மந்திரிசபை ஒப்புதல் அளிக்க கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கொண்கண் வழியாக திரும்புவதென்று தீர்மானம் செய்யப்பட்டது.

எத்தனை முறை நாம் professional&Pleasure Trip வழியாக பார்த்தாயிற்று, என்ற சலிப்பில்லாமல் இருக்க, சுவாரஸியம் கூட்ட, நான் Les Stroud-க்கு நிபந்தனை கொடுப்பது போல், கீழ் கண்டவாறு  தடை விதித்தேன்.

No Travel Agency.
No Friends & Relative-s Support!
திருவனந்தபுரத்திற்கு No Flight,
மற்ற தொலைவுகளுக்கு No Taxi,
தங்குமிடங்களுக்கு No Auto.

என்று சொல்ல சிறிது தயக்கத்துடனேயே, தங்குவதற்கு, பயணம் முடிந்து ஊர் திரும்ப ரயிலில் நேராக வருவதற்கு online reservation செய்து முடித்தனர்.

கோவையிலிருந்து திருவனந்தபுரம் வரை சாதாரண பேருந்துகள், நகர பேருந்துகளில் பயணம் செய்யப் பழகினர்.

விவேகானந்தர் பாறைக்கு Boat -ல் இடம் பிடிப்பதற்கு மட்டும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த இடத்திற்கு செல்லும் நேரத்தை அது  வெகு நேரத்திற்கு தள்ளியதால் சிறப்பு கட்டணம் செலுத்தினோம். ஆனால் அந்த சலுகையிலும் ஒரு நிபந்தனை, திரும்ப வரும்பொழுது வரிசையில் நின்றுதான் வரவேண்டும் என்று இருந்தது.

நான் ஒவ்வொரு முறையும்  ஸ்வாமி விவேகானந்தர் பாறைக்குச் சென்றபோதும் வெவ்வேறு மனநிலையில் போனாலும், திரும்ப வரும்பொழுது மிகுந்த தெளிவுடனேயே வந்திருக்கிறேன்.(மறக்க முடியாதது-ரெஸ்ட் ரூம்கள் மிக சுத்தம்). திரும்ப வரிசையில் நின்று, படகில் ஏறி திருவள்ளுவர் சிலையில் இறங்கினால், எங்கள் பின்னால் யாரும் இறங்கவில்லை. ஒருவேளை வசதிகள் சரியாக செய்யப்படாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் பேருந்திற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த போது அவர்களுக்கு நிறைய செய்திகள் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வந்த பேருந்தின் நேர்த்தியை  பார்த்தபோது எனக்கே சிறிது கலக்கமாயிற்று.

பேருந்தில் ஏறி புறப்பட்டவுடன் அவர்களது குதூகலம் திரும்பியது.மண்டைக்காடு தாண்டிய போது மூவரும், இந்த இடம்தான்-நீ தானே பொன் வசந்தம்-படத்தில் வந்த இடம் என்று அவர்கள் இரகசியம் பேசியது என் காதுகளிலும் விழுந்தது.

கன்னியாகுமரி தாண்டும் வரை அந்த வெயில் அவர்களை படாத பாடு படுத்தியது எனக்கும் சிறிது  கஷ்டத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம், கோவளம், கொச்சின், எர்னாகுளம் என்று சுற்றியதில் வாடி வதங்கி விட்டனர். திருவனந்தபுரம் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஊர் ஆகிவிட்டது. கோயில், அதை சார்ந்த இடங்கள் ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமியின் பிரமாண்டம், குளம், மனிதர்கள் எல்லாம் ஒரு காரணம். திருவனந்தபுரத்தை பற்றி நானும் உடல் வணங்கி,தனியாக எழுத உள்ளேன். தமிழர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரும்பும்போது, ஆஹா டாடி! தங்குவதற்கும், உண்பதற்கும், Return Journey-க்கும் கொடுத்த 5 ஸ்டார் comfort எங்களுக்கு ரொம்ப happy என்று சொன்னபோது, எனக்கும் பரமானந்தம் தான்.

ஆனால் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை உணர்த்த மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது!