Wednesday 7 May 2014












கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தாயிற்று. தெற்கு,தென் மேற்கு திசை மட்டும் எப்போதும் ஏதாவது பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது. பெரியப்பா! நான் இன்னும் கன்னியாக்குமரியில் சூர்யோதயம் பார்க்கவேயில்லை என எனது சகோதரனின் 7-ம் வகுப்பு படிக்கும் மகன்  சூர்யா கேட்க,  இந்த பாரிஸ்டர் ரஜினிகாந்த், கண்ணன் தொல்லை தாங்கமுடியலைப்பா!என்ற அலம்பலுடன் மந்திரிசபை ஒப்புதல் அளிக்க கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கொண்கண் வழியாக திரும்புவதென்று தீர்மானம் செய்யப்பட்டது.

எத்தனை முறை நாம் professional&Pleasure Trip வழியாக பார்த்தாயிற்று, என்ற சலிப்பில்லாமல் இருக்க, சுவாரஸியம் கூட்ட, நான் Les Stroud-க்கு நிபந்தனை கொடுப்பது போல், கீழ் கண்டவாறு  தடை விதித்தேன்.

No Travel Agency.
No Friends & Relative-s Support!
திருவனந்தபுரத்திற்கு No Flight,
மற்ற தொலைவுகளுக்கு No Taxi,
தங்குமிடங்களுக்கு No Auto.

என்று சொல்ல சிறிது தயக்கத்துடனேயே, தங்குவதற்கு, பயணம் முடிந்து ஊர் திரும்ப ரயிலில் நேராக வருவதற்கு online reservation செய்து முடித்தனர்.

கோவையிலிருந்து திருவனந்தபுரம் வரை சாதாரண பேருந்துகள், நகர பேருந்துகளில் பயணம் செய்யப் பழகினர்.

விவேகானந்தர் பாறைக்கு Boat -ல் இடம் பிடிப்பதற்கு மட்டும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த இடத்திற்கு செல்லும் நேரத்தை அது  வெகு நேரத்திற்கு தள்ளியதால் சிறப்பு கட்டணம் செலுத்தினோம். ஆனால் அந்த சலுகையிலும் ஒரு நிபந்தனை, திரும்ப வரும்பொழுது வரிசையில் நின்றுதான் வரவேண்டும் என்று இருந்தது.

நான் ஒவ்வொரு முறையும்  ஸ்வாமி விவேகானந்தர் பாறைக்குச் சென்றபோதும் வெவ்வேறு மனநிலையில் போனாலும், திரும்ப வரும்பொழுது மிகுந்த தெளிவுடனேயே வந்திருக்கிறேன்.(மறக்க முடியாதது-ரெஸ்ட் ரூம்கள் மிக சுத்தம்). திரும்ப வரிசையில் நின்று, படகில் ஏறி திருவள்ளுவர் சிலையில் இறங்கினால், எங்கள் பின்னால் யாரும் இறங்கவில்லை. ஒருவேளை வசதிகள் சரியாக செய்யப்படாததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் பேருந்திற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த போது அவர்களுக்கு நிறைய செய்திகள் சொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வந்த பேருந்தின் நேர்த்தியை  பார்த்தபோது எனக்கே சிறிது கலக்கமாயிற்று.

பேருந்தில் ஏறி புறப்பட்டவுடன் அவர்களது குதூகலம் திரும்பியது.மண்டைக்காடு தாண்டிய போது மூவரும், இந்த இடம்தான்-நீ தானே பொன் வசந்தம்-படத்தில் வந்த இடம் என்று அவர்கள் இரகசியம் பேசியது என் காதுகளிலும் விழுந்தது.

கன்னியாகுமரி தாண்டும் வரை அந்த வெயில் அவர்களை படாத பாடு படுத்தியது எனக்கும் சிறிது  கஷ்டத்தைக் கொடுத்தது.

திருவனந்தபுரம், கோவளம், கொச்சின், எர்னாகுளம் என்று சுற்றியதில் வாடி வதங்கி விட்டனர். திருவனந்தபுரம் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஊர் ஆகிவிட்டது. கோயில், அதை சார்ந்த இடங்கள் ஸ்ரீ அனந்த பத்மனாப ஸ்வாமியின் பிரமாண்டம், குளம், மனிதர்கள் எல்லாம் ஒரு காரணம். திருவனந்தபுரத்தை பற்றி நானும் உடல் வணங்கி,தனியாக எழுத உள்ளேன். தமிழர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திரும்பும்போது, ஆஹா டாடி! தங்குவதற்கும், உண்பதற்கும், Return Journey-க்கும் கொடுத்த 5 ஸ்டார் comfort எங்களுக்கு ரொம்ப happy என்று சொன்னபோது, எனக்கும் பரமானந்தம் தான்.

ஆனால் நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை உணர்த்த மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது!

No comments:

Post a Comment