Tuesday 3 June 2014

4th June 2014
---------------------
தாயுமானவனுக்கு 75-வது பிறந்தநாள் வாழ்த்து!

உங்களுடைய நேர்மையான சிந்தனைகளையும்,விசாலமான பார்வையையும், இளமையானஉணர்வையும் என்னுள் எப்போது விதைத்தீர்கள்?
1971-ம் வருடம்,கரூர் St. Therasa's Convent-ல் Mrs.Samuel உதவியுடன் Mother Superior Sr.Julie Vicotoria-விடம் முதல் வகுப்பில் கொண்டு விட்டதும், டெரிகாட்டன் Half Trouser, Quovadis செப்பல், மீனாக்ஷி அம்மன் தேர் பொம்மை வாங்கிக் கொடுத்ததும்,ஒவ்வொரு கணக்கு தேர்வு அன்றும் உங்கள் சைக்கிளின் பாரில் உட்காரவைத்து கொண்டுபோய் விட்டு,எழுதி முடித்து வரும்போது, parry's சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாராட்டுவதும், என்னுடைய பாஸ்கட் பால் விளையாட்டுக்காக Anklet ஷூ உங்கள் நண்பர்கள் மூலமாக எனக்கு வாங்கிக் கொடுத்ததும்,நகுமோமு-வையும், Bony-em-யும் ரசிக்க சொல்லிக் கொடுத்ததும்,கல்கி,சாண்டில்யன், Chase, Mills&Boon படிக்கத் தூண்டியதும், திருமலை தென்குமரி, மேரா நாம் ஜோக்கர், என்ட்டர் தி டிராகன் சினிமா பார்ப்பதற்கும், ஆஷா கேலுன்னி நடனத்தை ரசிப்பதற்கும், நல்ல மதிப்பெண்கள் +2-வில் வாங்கியதால் திருச்சியில் விடுதியில் தங்கிதான் மேல்படிப்புகளை தொடரவேண்டும் என்று வற்புறுத்தி Prof.புருஷோத்தமன் சார் அவர்களின் பாதுகாப்பில் விட்டதும், தஞ்சாவூர்-ல் நான் வேலை பார்த்தபோது, ஒவ்வொரு திங்கள் கிழமையும் பாய்லர் பழுதடைந்து, வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறி, மிகுந்த வேலைப்பளுவினால் நான் அந்த வேலையை விட்டுவிட்டு நம்முடைய பஸ் பாடி கட்டும் தொழிலையே பார்த்துக் கொள்கிறேன் என்ற பொழுது, ஆண் பிள்ளையாய், அதுவும் முதற் பிள்ளையாய் பிறந்துவிட்டால் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று என்னை தேற்றியதும், பொறுப்புகளை உணரவைத்ததும்,மனைவி,மக்கள், வீடு, சொந்தத் தொழில் என்று தடுமாறிய போது, சோதனைகளை சாதனைகளாக மாற்ற வயது வித்தியாசமில்லாமல் என்னுடன் தோளோடு தோளாக நின்றதும், சமீபத்தில் அம்மாவை இழந்த போது, இன்னும் நான் இருக்கேன் உனக்கு என்று தேற்றியதும்,

எதற்காக அப்பா?
உங்கள் சரணங்களில் நான்!

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

உங்களுக்கு பிடித்த இந்த குறளே என்னுடைய சமர்ப்பணம்!

No comments:

Post a Comment